நாகர்கோவில், ஜூலை 9 –
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ எம் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினரால் அகஸ்தீஸ்வரம் வட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணி நேற்று முன்திகம் நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக செம்பொன்கரை என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் ஆட்டோ நிற்க்காமல் சென்றதால் துரத்தி பிடித்தனர். ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 554 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்ற பட்ட அரிசி கோணம் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
அன்று இரவு 11 மணியளவில் கிள்ளியூர் வட்டம் ரோந்து பணியில் இருந்த போது ஹெலன் நகர் என்ற இடத்தில் ஒரு மறைவான பகுதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில். கிள்ளியூர் வட்டம் இனயம் என்ற இடத்தில் ஒரு பஞ்சாயத்து கிணறு பக்கம் சுமார் 600 கிலோ ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விடியற்காலை சுமார் 4.30 மணியளவில் கிள்ளியூர், நடுத்துறை என்ற இடத்தில் பாழடைந்த வீட்டின் முன் புறத்தில் சுமார் 1500 கிலோ பொது வினியோக திட்ட அரிசி மற்றும் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் சுமார் 1700 லிட்டர் கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்ததை கைப்பற்றப்பட்டது. மேலும் காலை 5.30 மணியளவில் பொது வினியோக திட்ட ரேசன் மண்ணெண்ணெய் 140 லிட்டர் நடுத்துறை என்ற இடத்தில் புல் தரையில் மூடி போட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இனயம் பகுதியில் நடந்த ரோந்து பணியில் இருந்த போது புதுக்கடை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐக்கள் ஜாண் சத்திய தாஸ் செல்வ ராஜ் அரிசி பறிமுதல் செய்ய உதவி செய்தனர். நடுத்துறை என்ற இடத்தில் அரிசி மண்ணெண்ணெய் எடுக்கும் போது கருங்கல் காவல் நிலைய காவலர்கள் உதவி செய்தனர். கைப்பற்றப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், ஒப்படைக்கப்பட்டது. வெள்ளை நிற மண்ணெண்ணெய் தூத்தூர் மண்ணெண்ணெய் அரசு கிட்டங்கியிலும், நீல நிற ரேசன் மண்ணெண்ணெய் மார்த்தாண்டம் கிட்டங்கியிலும் ஒப்படைக்கப்பட்டது.



