கிருஷ்ணகிரி, ஜூலை 31 –
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மாநில செயற்குழு முடிவின்படி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்ட அரசாணை எண் 123 திருத்தம் செய்யக்கோரி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால் வரவேற்று பேசினார். பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2026 இல் உள்ள குறைகளை கலைந்து திருத்தம் செய்து உத்தரவிட வேண்டும், மருத்துவ காப்பீடு மாத பிரிமியம் தொகையை ரூபாய் 644 இல் இருந்து 390ஆக குறைக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு காசு இல்லாமல் மருத்துவம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு அட்டையை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக சங்கங்களை அழைத்து பேச வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், மாத மருத்துவ படி ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜெயக்குமார் துவக்க உரையாற்றினார். சிவக்குமார்,டாக்டர் வேடியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, தண்டபாணி,சொக்கநாதன், பெரியண்ணன், கோவிந்தன், பானுபூனுஸ்கான், இளங்கோவன், விஸ்வநாதன், கேசவன், ராமலிங்கம் உள்ளிட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.



