கோவை, ஜூன் 29 –
கோவை வடக்கு மாவட்டம்,காரமடை நகராட்சி 4வது வார்டு இம்மானுவேல் நகர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் கே.ஜி.குரு பிரசாத் தலைமையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிதது மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 4வது வார்டு நிர்வாகி எஸ்.கே.செந்தில் வரவேற்றார்.
மேலும் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், மேட்டுப்பாளையம் நகர செயலாளர்கள் அஷ்ரப் அலி, முனுசாமி மற்றும் காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு 200 பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டது. மேலும் அப்பதியில் உள்ள பொதுமக்கள் 500 மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் காரமடை நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நகர மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் ரஞ்சித்குமார் நன்றி கூறினர்.



