கமுதி, ஜுன் 17 –
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. பொது மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கழுதி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். கமுதி தாசில்தார் முருகேஷ் மற்றும் நேர்முக உதவியாளர் தாசில்தார் சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது மக்களின் மனுக்கள் மீது உடனடி விசாரனை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன.
கடலாடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் துறைதுணை இயக்குனர் சுல்த்தான் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. கடலாடி தாசில்தார் பரமசிவம் முன்னிலை வகித்தார். தலைமை துணை தாசில்தார் ரேணுகா தேவி அனைவரையும் வரவேற்றார். பொது மக்களின் மனுக்கள் மீது உரிய விசாரனை செய்து உடனடி தீர்வு காணப்பட்டன.
பிரச்சனைக்குரிய மனுக்கள் மீது சம்பவ இடத்தினை நேரிடையாக பார்வையிட்டு தீர்வு காண முடிவு செய்யப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர்கள் பிர்கா வாரியாக தங்களது கணக்குகளை காண்பித்து அதிகாரியிடம் பாராட்டைப் பெற்றனர்.



