கன்னியாகுமரி, மே 1 –
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கிடங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிலிப்பு என்பவர் மகள்கள் ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வந்தனர். சமீபத்தில் நாடு திரும்பிய இருவரும் கன்னியாகுமரிக்கு வந்தனர். இதை அடுத்து தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியே சென்றவர்கள் பின்னர் இருவரும் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை பகுதியில் 2 பெண்களின் உடல் இறந்த நிலையில் கரையில் ஒதுங்கி கிடப்பதாக கடலோர குழும போலீசார்ருக்கு தகவல் கிடைத்து. போலீசார் பிணத்தை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்தது கேரளாவில் இருந்து வந்த மாயமான சகோதரிகள் ஆனி பிலிப், மீரா பிலிப் என்பது தெரிய வந்தது. போலீசார் இரு உடல்களை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது ஒரு போலீசார் தரப்பில் கூறுகையில்: அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன்பு ஆனி பிலிப், மீரா பிலிப் ஆகியோர் தங்களது மூத்த அக்கா எலிசபெத் பிலிப்புக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அதில் நாங்கள் மன வருத்தத்துடன் ஊருக்கு புறப்படுகிறோம். இனி எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம். நாங்கள் ரெண்டு பேரும் இறந்த பின்னர் கன்னியாகுமரிக்கு வந்து எங்களது இறுதி சடங்கை செய்துவிட்டு அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைக்க வேண்டும் என்றும், எங்களுக்காக இதை வேண்டுமென உருக்கமாக மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை பின் இருவரின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் மகள்களிலும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரியில் இறுதிச் சடங்கு செய்து அஸ்தியை கடலில் கரைக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.



