கிருஷ்ணகிரி, மார்ச் 5 –
ஊத்தங்கரை அடுத்த பெரியார் நகர் கிராம பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கிராமத்தில் 7, 9 வது வார்டு 4வது தெருவில் 15 மீட்டர் மட்டும் சாலை போடாமல் உள்ளது. அவ்வழியாக பள்ளி குழந்தைகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையாக உள்ளது என்பதால் அடிப்படை தேவையான சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



