கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனி கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமப் பகுதியில் மின் மோட்டார் பழுதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சரிவர குடிநீர் வழங்காத அவல நிலை காணப்பட்டு வந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத சூழலில் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து கிளர்க்கிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக உரிய அதிகாரியிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று அறிந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூர் – ஊத்தங்கரை தேசிய நெடும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் துணை ஆய்வாளர் ராஜாசங்கிலி கருப்பன், எஸ்.பி. சி ஐ.டி.அதியமான் மற்றும் ssi கிருஷ்ணன், ஜோனல் டெப்டி பி டி ஓ. லோகாம்பிகை விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு குடிநீர் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து அனைவரும் கலந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.



