ஈரோடு, ஜூன் 13 –
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செந்தில் நாதன், மேற்கு மாவட்ட செயலாளர் சேது பாஸ்கர், கிழக்கு மாவட்ட செயலாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ச்சுனராஜ், பொருளாளர் செந்திலதிபன், கொள்கை விளக்க அணி செயலாளர் வந்திய தேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தொண்டர் அணி மாநில துணை செயலாளர் முசிறி ரவி, ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் வனிதா மணி, கோட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



