By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் காமிரா மூலம் கண்காணிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் காமிரா மூலம் கண்காணிப்பு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் காமிரா மூலம் கண்காணிப்பு

Last updated: April 25, 2026 5:01 pm
April 25, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 25 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியுமான கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி. பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 2379 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் 90.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்தியப் பார்வையாளர்கள் முன்னிலையில் காணொலி காட்சிப் பதிவு செய்யப்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட இருப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறையின்படிஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, பெருந்துறை. பவானி மற்றும் அந்தியூர் ஆகிய தொகுதிகளுக்கு ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி ஐ ஆர் டி டி யிலும், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் உள்ள இருப்பு காப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.

காப்பறைக்கு ஆயுதம் தாங்கிய இரண்டு அடுக்கு பாதுகாப்புடன் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படைப் பிரிவு 24 நேரமும் கண்காணிப்புக் கேமராவின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், காப்பறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக தங்களின் பிரதிநிதிகளை நியமிப்பது குறித்தும், வெளியே மேலும் அவர்களைப் பாதுகாப்பு வளையத்தின் உட்பகுதிக்கு அனுமதிக்கப்படுவது குறித்தும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரி ஈரோடு மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளைம் ஆகிய இடங்களில் உள்ள காப்பறையின் கண்காணிப்புக் கேமரா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுக்கை நாளன்று, போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் காணொலிப் பதிவின் கீழ் இந்த காப்பறை மத்தியப் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்; பெண் கைவரிசையா?
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2026-27 ஆண்டிற்கான புதிய தலைமை தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

அதிமுகவில் தான் எங்களது கூட்டணி; கள்ளர் பள்ளியை அரசுடைமையாக்குவதை விட்டுவிடுங்கள் – முன்னாள் எம்எல்ஏ பி.வி. கதிரவன்

July 28, 2025
36 Views
நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள்
ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை விழிப்புணர்வு
பரமக்குடி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account