மார்த்தாண்டம், மே 25 –
மார்த்தாண்டம் அருகே மேல்புறம்-அருமனை சாலையில் மளிகை கடை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ஆட்டோ உத்தரங்கோடு சந்திப்பில் செல்லும் போது மஞ்சலுமூடு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரில் ஆட்டோ வருவதை தெரியாமல் சாலையை கடக்க முயன்ற போது ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்டார். உயிருக்கு போராடிய அவரை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டோவின் அடியில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். பைக்கை ஓட்டி வந்தவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து இருவரையும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



