சுசீந்திரம், அக்டோபர் 31 –
சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோவில் அருகே உள்ள பழமை வாய்ந்த முன்னுதித்த நங்கையம்மன் கோவில் திருப்பணிவேலை இன்று காலை துவங்கியது. இதுகுறித்து கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி அவர்கள்கூறும்போது: கடந்த 2023-2024 ஆண்டு தமிழக அரசு சேதமடைந்த பழமையான சுமார் 100 கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கு ஆணை பிறப்பித்திருந்தது.
அதன்படி மிகவும் பழமை வாய்ந்த முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூபாய் 43 லட்சம் அறநிலைத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை இன்று துவங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் கோவிலில் உள்ள சேதங்கள் சரி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். அதற்கான வேலை இன்று முன்னுதித்தனங்கையம்மன் கோவிலில் துவங்கியது. இதில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.



