சென்னை, ஜூன் 20 –
சென்னை ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், முதலாம் ஆண்டு புதிய மாணவியர் வரவேற்பு விழா நடைபெற்றது. கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவியரை வரவேற்பதற்கும், கல்லூரிச் சூழலை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புதிய மாணவியர், அவர்களது மூத்த மாணவியரால் நடன நிகழ்ச்சியுடன் மலர் தூவல், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துகள் வழங்கி அன்புடன் வரவேற்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி, மூத்த மாணவியர் மற்றும் புதிய மாணவியர்களின் கலந்துரையாடலுக்கான ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், மாணவியர் தங்கள் கல்விப் பயணத்தை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தொடங்க உதவியது.



