சுசீந்திரம், மே 28 –
சுசீந்திரம் எஸ் எம் பெருமாள் நகர் பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் (45). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கோடாங்கி பட்டி. இவரது மகன் மணிகண்டன் (26). இவர் பிஎஸ்சி கேட்டரிங் படித்து முடித்து கேட்டரிங் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டு பாத்ரூமில் வெள்ளை நிற டவ்வலால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவரது தந்தை மகாலிங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


