மார்த்தாண்டம், ஜூலை 6 –
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ டி.டி.பிரவீன், முன்னாள் பிஷப் தர்மராஜ் ரசாலம் உள்ளிட்ட 16 பேர் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா சி.எஸ்.ஐயின் தெற்கு கேரளா மகா திருச்சபை தலைமையகம் திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் பகுதியில் உள்ளது. இங்குள்ள எம்.எம். தேவாலயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி ஆலய பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் புகார் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் கோர்ட் தலையீட்டைத் தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் பிஷப் தர்மராஜ் ரசாலம், விளவங்கோடு எம்.எல்.ஏ. பிரவீன், நிபு ஜேக்கப் வர்க்கி, ரசலையன், சதேஷ் குமார் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.



