திருப்பூர், ஜூன் 08 –
மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.
அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ.கமலி ஆகியோர் தலைமையில் நேற்று (07.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் (திருப்பூர் தெற்கு) எஸ்.பாலமுருகன், திருப்பூர் வடக்கு வி.சத்யபாமா (பல்லடம்), ராம்குமார் (காங்கேயம்), என்.எஸ்.என்.நடராஜ், மாநகராட்சி துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) க.சங்கமித்திரை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



