நாகர்கோவில், பிப்ரவரி 28 –
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கத்தின் கன்னியாகுமரி மத்திய மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது வணிகர் நலன், வணிக வளாகங்களின் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வணிகர்களின் பாதுகாப்பிற்கு காவல் துறை தொடர்ந்து துணை நிற்கும் என தெரிவித்தார். இந்த சந்திப்பில் வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



