களியக்காவிளை, அக். 27 –
மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க புதிய அணித் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க குமரி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் நந்தினி, மண்டல் பார்வையாளர் விஜி ஒப்புதலுடன் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவண வாஸ் நாராயணன் கீழ் குறிப்பிடும் புதிய அணித் தலைவர்களை அறிவித்துள்ளார்.
மேல்புறம் தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக விளவங்கோடு ஊராட்சியை சார்ந்த சஜின், மகளிரணி தலைவியாக இடைக்கோடு பேரூராட்சியை சார்ந்த ஹேமலதா, விவசாய அணித் தலைவராக களியக்காவிளை பேரூராட்சியை சார்ந்த மஹாலிங்கம், ஓ.பி.சி. அணித் தலைவராக பளுகல் பேரூராட்சியை சார்ந்த ஜெயராஜ், எஸ்.சி. அணித் தலைவராக மருதங்கோடு ஊராட்சியை சார்ந்த சஜித் குமார். சிறுபான்மை அணித் தலைவராக இடைக்கோடு பேரூராட்சியை சார்ந்த றாபின்சன் உள்ளிட்டோர்களை புதிய அணித் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


