பரமக்குடி, ஜூலை 21 –
பரமக்குடியில் முன் விரோதம் காரணமாக அரசு ஊழியருக்கு வெட்டு. ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு. பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன்(52). இவர் குடிநீர் வடிகால் வாரியத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான திவாகரன் (34) தந்தை தேவேந்திரனுக்கும் குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திரனிடம் கார் வாங்கியது தொடர்பாக மாதவனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாதவனின் வீட்டிற்கு சென்ற திவாகரன் தகராறு ஈடுபட்டுள்ளார். இதனால் மாதவனுக்கும் திவாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திவாகரன் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மாதவனை வெட்டியுள்ளார். ரத்த காயத்துடன் இருந்த மாதவனை மீட்ட அவரது மனைவி மற்றும் மகள்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மாதவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திவாகரன் மற்றும் அவருடைய நண்பர் பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகரனை கைது செய்தனர். தலை மறைவான பிரகாசை (34) போலீசார் தேடி வருகின்றனர்.


