திருச்சி, மே 9 –
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த குமரவேல், நாமக்கல்லில் உள்ள பஞ்சு மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (மே 7) பிற்பகல் முசிறி பெரியார் பாலம் அருகே பேருந்துக்காக காத்திருந்தபோது, அருகில் இருந்த மின்சார கம்பத்தைத் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முசிறி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



