திருச்சி, ஏப். 30 –
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதில் தீக்குண்டம் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, கரகம் பாலித்து, சிறப்பு பூஜைகள் செய்து மாரியம்மனை வழிபட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து, கோவில் வளாகத்தில் உள்ள தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



