குளச்சல், ஜூன் 26 –
மண்டைக்காடு அருகே புதூர் பிஆர்எஸ் நகரை சேர்ந்தவர் சகாய எல்டின் (40). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுஜா (36). இவர் மீனவர் கூட்டுறவு சொசைட்டியில் எழுத்தராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அனுஜா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சகாய எல்டின் வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் அவரது வேட்டியால் தூக்கு போட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் சகாய எல்டின் வெளியே வராதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்காமல் ஜன்னல் வழியாக பார்த்தபோது சகாய எல்டின் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து, அவரது மனைவி அனுஜாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அனுஜா அளித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் சம்பவ இடத்தில் வந்து சகாய எல்டனின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


