மதுரை, மே 25 –
மதுரை அழகர் நகரைச் சேர்ந்த சுரேஷ், உறவினர் கணேச முருகனுடன் காரில் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டிக்குச் சென்றபோது, எட்டு மர்ம நபர்கள் காரை மறித்து, இருவரையும் தாக்கி, காரை கல்லால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து சுரேஷ் அளித்த தகவலின் பேரில், மர்ம நபர்கள் எட்டு பேரையும் மணப்பாறை காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



