ஈரோடு, ஜூன் 22 –
கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி அவர்கள் ஈரோடு இடையன்காட்டுவலசு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் டீம் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப் I,II,IIA,IV ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்றையதினம் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பானது கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பயின்ற 10 மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றார்கள். இந்த பயிற்சி வகுப்பினை அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும் மாணவர்கள் முயற்சி எடுத்து திட்டமிட்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். இந்த மையத்திலிருந்து ஏராளமானவர்கள் வெற்றி பெற்று பணியில் சேர்கிறார்கள் என்ற செய்தி என் காதுகளுக்கு விரைவில் எட்ட வேண்டும் என்பது எனது கனவாகும் என்று கூறினார்.
மேலும் இப்பயிற்சியில் இந்த பயிற்சி மையத்தில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு ஆணையாளர் அர்பித்ஜெயின் பள்ளித்தலைமையாசிரியர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



