அருமனை, மே 18 –
அருமனை அருகே கடையால் மூடு சந்திப்பில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் வந்தார். அவர் மக்களோடு மக்களாக சேர்ந்து அமர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக விளவங்கோடு தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து விவரம் கேட்டும் கண்டும் தெரிந்து கொண்டார். கடையை மாற்றுவதையே குறிக்கோளாக கொண்ட பெண்கள் கலைந்து செல்லவில்லை. பின்னர் தாசில்தார், காவல் ஆய்வாளர் பிரபின் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் கடைக்குள் இருந்த மது பாட்டில்களையும் பெயர் பலகையும் எடுத்து அங்கிருந்து அகற்றினார். பெண்கள் எல்லோரும் உற்சாகமாக கூட்டாக சேர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.



