புதுக்கோட்டை, செப். 16 –
புதுக்கோட்டை கிளை சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சீனியர் கிளை மேலாளர் S.காசிநாதன் இது குறித்து பேசிய போது: 25 ஆண்டுகால சிறப்பான சேவையைத் தொடர்ந்து வழங்கியதை பெருமிதத்துடன் நிறைவு செய்திருக்கிறது. இதன் மூலம் தனது பயணத்தில் வெற்றிகரமாக ஒரு அர்த்தமுள்ள மைல் கல்லை இந்நிறுவனம் எட்டியிருக்கிறது. 25 ஆண்டுகள் நிறைவு என்ற வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் வாடிக்கையாளர்களுடனான நீடித்த கூட்டாண்மை, பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுக்கோட்டை கிளையின் பாரம்பரியத்தை வடிவமைத்த அவர்களது குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றை அங்கீகரித்து நன்றியுணர்வோடு கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக இன்றைய கொண்டாட்டம் அமைந்தது.
“சுந்தரம் ஃபைனான்ஸில் எங்களுக்கு நிலைப்புத்தன்மையையும், உத்வேகத்தையும் வழங்குவது வெறுமனே நீண்ட பல ஆண்டுகளாக செயல்படுவது மட்டுமல்ல; மக்களுடனான எங்கள் உறவை வரையறுக்கும் உண்மை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மையே எங்களுக்கு அர்ப்பணிப்பையும், சிறப்பான சேவையாற்றும் உத்வேகத்தையும் வழங்குகிறது என்று கூறினார்.



