புதுக்கடை, பிப். 17 –
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வன்சன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ஜேனட் புஷ்பலதா (49) என்ற மனைவியும் ஒரு மகளும் ஊரில் உள்ளனர். சம்பவ தினம் ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்று, அங்கு இரவு தங்கி உள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க உதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த ரொக்க பணம் ரூ 20 ஆயிரம் மற்றும் உண்டியலில் இருந்த ரூபாய் 15 ஆயிரம், மேலும் 3000 ரூபாய் மதிப்புள்ள எட்டு கை கடிகாரங்கள் என மொத்தம் 38 ஆயிரம் மதிப்பில் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து ஜேனட் புஷ்பலதா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.


