ஈரோடு, மார்ச் 12 –
ஈரோடு மாவட்டம் பல்வேறு பகுதிகளில் புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடம் மற்றும் புதிய முழு நேர நியாயவிலைக் கடைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். இந்த கடை ஈரோடு மூலப்பாளையம், என்.ஜி.ஜி.ஓ. நகர், விநாயகர் கோவில் வீதி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் செயல்பட்டு வந்தது. இப்போது முழு நேர ரேஷன் கடையாக மாற்றப்பட்டு உள்ளது. இக்கடையின் மூலம் 804 குடும்ப அட்டைதார்கள் பயன் பெறுவார்கள்.
இதை தொடர்ந்து, லக்காபுரம் புதூர், சுப்பராயவலசு, புதிய முழு நேர நியாய விலை கடையினையும், மொடக்குறிச்சி, ஈஞ்சம்பள்ளி கிளை புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடத்தினையும், கொடுமுடி சாலைப்புதூர் கிளை புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடத்தினையும், மொடக்குறிச்சி, பள்ளியூத்து புதிய கூட்டுறவு அலுவலக கட்டிடத்தினையும், தொடர்ந்து, பெருந்துறை ஆர்.எஸ். வெள்ளோடு நியாய விலைக் கடையுடன் கூடிய புதிய கூட்டுறவு சந்தையினையும், காசிபாளையம், புதிய கூட்டுறவு கிளை அலுவலக கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து கொடுமுடி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவியினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். இந்நிகழ்வில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திர குமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, முதன்மை வருவாய் அலுவலர் பிரகாஷ் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



