இராமநாதபுரம், செப். 18 –
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி சுவாமி தரிசனம் செய்து அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர்.
ராமநாதபுரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரண்மனை முன்பு பாஜக சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாவட்ட முன்னாள் தலைவர் தரணிமுருகேசன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.



