குளச்சல், செப். 5 –
பாலப்பள்ளம் பகுதி நிர்வக் குழி என்ற இடத்தை சேர்ந்தவர் தனுஷ் (25). கருங்கல் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி 10 மாத குழந்தையும் உள்ளது. இவருக்கு குளச்சல் பகுதியில் கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ படித்து வரும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த மாணவி டைப்ரைட்டிங் படிக்க சென்ற போது கடந்த ஜூலை மாதம் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று ஒரு தோப்பில் வைத்து பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீஸர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தனிஷை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று ஆலஞ்சி பகுதியில் வைத்து தனிசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



