நாகர்கோவில், ஜூன் 4 –
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், பள்ளி செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் பாதுகாப்பே முதன்மை என்ற நோக்கில், பள்ளி தொடங்கும் நேரங்களில் சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயங்களைத் தவிர்க்கும் வகையில், காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை அதேபோல் மாலை 03.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நகர்ப்புற பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.



