பரமக்குடி, பிப். 24 –
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 16 நாட்களாக பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் மாணவருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 8000 திற்கு மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம், நீதிமன்ற உத்தரவின்படி யுஜிசி ஊதியம் 57, 700, பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளத்தும் கூடிய மகப்பேறு விடுப்பு, 12 மாத சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், பரமக்குடி அரசு கலை கல்லூரியில் பணியாற்றக்கூடிய 40 பெண் கவுரவ விரிவுரையாளர்கள் உட்பட 71 கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த 15 நாட்களாக கையெழுத்து இடாமல் பணியை புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று,கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய மாணவர் சங்கத்தினால் மாணவருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



