திருப்பூர், ஆக. 29 –
திருப்பூரில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராக பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கும் அலுவலக கட்டிடம் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வீரராகவ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் (எ) சங்கு ராஜா, சிம்கோ S. சம்பத்குமார், பரமசிவம், பிருந்தா ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் செயல் அலுவலர் வனராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



