By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்

Last updated: April 18, 2026 7:11 pm
April 18, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 18 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ இன்று பட்டகசாலியன் விளையில் இருந்து காலையில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவருடன் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எம் ஆர் காந்தி எம்எல்ஏ பேசியதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை பிரதமர் நேரடியாக கண்காணிக்கிறார். இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் தாமரை வெற்றி பெறச் செய்ய நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தாருங்கள். உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்திற்கு அளித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். எந்த நேரத்திலும் மக்கள் என்னை வந்து சந்திக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும். மாணவர்களுக்கு கல்வி கடன் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஓடோடி சென்று குரல் கொடுத்தவன் நான். இந்த தொகுதியில் ஐடி பார்க் வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி முதல் அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, தற்போது ஐடி பார்க் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் கூடுதலாக வேலை வாய்ப்பு இந்த தொகுதியில் உருவாக்க வேண்டும். அதற்காக பாரதி ஜனதா அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை தாருங்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், ஜல் ஜீவன் போன்ற திட்டங்களால் எண்ணற்ற பயனாளிகள் பயனடைந்துள்ளனர். நாகர்கோவில் தொகுதியில் போக்குவரத்து பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாற்றுத்திட்டங்கள் கொண்டுவர வேண்டும்.

நாகர்கோவிலில் புற நகரில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பஸ் நிலைய பணிகள் அமைக்கப்படும். ரயில் நிலையத்திலிருந்து எளிதில் பஸ நிலையம் வந்து செல்ல புதிய புதிய பஸ் வசதி செய்யப்படும். வலம்புரி விளை குப்பை கிடங்கு பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளேன். இந்த தொகுதி முழு வளர்ச்சி பெற தாமரைக்கு வாக்குகளை தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் உதவி
ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை
அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்
திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்ற இருவர் கைது
மாநில அளவிலான வாலிபால் போட்டி: கார்த்தி வேல்மாறன் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறுதானிய ஊட்டசத்து வழங்கல்.

January 27, 2025
60 Views
திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் கிறிஸ்துமஸ்
குமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி
குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்
குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது. எஸ்பி நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account