நாகர்கோவில், செப்டம்பர் 10 –
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 25ம் தேதி மாலை 3:30 மணிக்கு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


