நாகர்கோவில், மார்ச் 16 –
நாகர்கோவில் குருசடி பகுதியை சேர்ந்தவர் டோன் அந்தோணி (30). காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் கிரிதரன் (21) என்பவருடன் பைக்கில் குஞ்சன் விளை பகுதியிலிருந்து வல்லன்குமாரன் விளை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கிரிதரன் பைக்கை ஓட்ட டோன் அந்தோணி பின்னால் அமர்ந்திருந்தார்.
வல்லன் குமாரன் விளை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வரும்போது அதிவேகம் மற்றும் அஜாக்கிரதை காரணமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது. இதன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் டோன் அந்தோணி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


