தேனி, மார்ச் 16 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 40 பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பணம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். Cvigil என்கிற இணையதளம் மூலம் போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும் புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கூறும் நபர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் 40 லட்சம் வரை செலவு செய்யப்பட வேண்டும். அது குறித்து தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்துவார்கள். தமிழக – கேரளா எல்லையான தேனி இடுக்கி மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு குறித்து இரு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேல் 6838 வாக்காளர்களும் நூறு வயதுக்கு மேல் 130 வாக்காளர்களும் உள்ளனர். அவர்களுக்கு வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதி ஏற்படுத்தி தரப்படும். வருஷநாடு வெள்ளிமலை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளி மாநிலங்களில் வாக்குரிமை வைத்துள்ளார்கள். அவர்களில் 5 பேர் மட்டும் வந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை உள்ளது. அவர்கள் வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகின்றனர். மேலும் மத்திய துணை ராணுவத்தினரும் ஈடுபடுகிறார்கள்.



