ஈரோடு, ஜூன் 25 –
தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு – மேற்கு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஈரோடு நல்லி வளாகம் ஸ்டான்லி ஹாலில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு செயலாளரும் மண்டல துணை பொறுப்பாளருமான
கணேசன் மற்றும் கேப்டன் மன்ற துணைச் செயலாளர், ஈரோடு மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்புச் செயலாளரும் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான
முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஈரோடு மாநகர மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.