தேனி, ஏப்ரல் 28 –
தேனி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 27.04.2026 அன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தலைமையேற்று, திருவிழா காலத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ உதவி மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சிறப்பாக ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
மேலும், தமிழக-கேரள எல்லைப் பகுதியாக இருப்பதால், இரு மாநிலங்களின் இணைந்து செயல்பாடுகளும் முக்கியம் எனக் குறிப்பிடப்பட்டு, அதற்கான ஒருங்கிணைப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



