தென்தாமரைகுளம், ஜூன் 19 –
தென்தாமரை குளம் எல் எம் எஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு 100 லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிப்பு உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினர். அதன் திறப்பு விழா நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கால்வின் தலைமை வகித்தார். சேகர ஆயர் ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெபித்து உபகரணங்களை பள்ளிக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அனு ஜெ பிரீதா மற்றும் திருப்பணியாளர் தேவராஜ ஆல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் தாளாளர் அருள் ஞான பெல், ஆலய கணக்கர் பெனிஜோசப், டீக்னஸ் அனிதா, முன்னாள் மாணவர்கள் சந்திரசேகர், செல்லத்துரை, கிளாட்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



