தென்காசி, மே 13 –
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை கடந்த வாரம் உடல்நல குறைவால் காலமானார். அவர் கடந்த பல ஆண்டுகளாக தென்காசி மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். இந்த ஆண்டும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக பெரும்பங்கு ஆற்றினார். அவருடைய இழப்பு திமுகவிருக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரைப் போற்றும் வகையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி, கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



