By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்

Last updated: April 2, 2026 6:10 pm
April 2, 2026
26 Views
Share
SHARE

திருவட்டாறு, ஏப். 2 –

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி வாகனத்தில் பவனி வருதல், ஹரிநாம் கீர்த்தனம், நாராயணீய பாராயணம், கதகளி, சொற்பொழிவு, பரத நாட்டியம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

9.ம் நாளான நேற்று மாலை திருவாதிரைக்களி, சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரியைத் தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து கருடவாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசுவாமியும், எந்தவித வாத்தியக்கருவிகளும் ஒலிக்காமல் நிசப்தமாக தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பகுதியில் வேட்டைக்கு எழுந்தருளினர்.

தேங்காயில் அம்பு எய்யும் வேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மேள தாளம் முழங்க சிவன் கோவில், கருடாழ்வார் கோவில், பஜனை மடம், தளியல் முத்தாரம்மன் கோவில், நான்குமுனை சந்திப்பு வழியாக கோவிலுக்கு திரும்பி வந்தனர். வேட்டை முடிந்து திரும்பி வரும்போது வீடுகளிலிருந்து பக்தர்கள் மலர்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் கோவிலில் உள்ளே ஆதிகேசவப் பெருமாள் விக்ரகம் கொண்டு செல்லப் பட்டதும், தேவி வாசலை அடைத்து ஆதிகேசவ பெருமாளிடம் கோபம் கொண்டு, “எங்கே சென்று திரும்புகிறீர்?” என கேள்வி கேட்கும் பாரம்பரிய நிகழ்வு நடந்தது. சுவாமி, “முத்தாரம்மன் சத்தியமா வேட்டையாடி திரும்புகிறேன்” என்று சொல்கிறார். பின்னர் தேவி சமாதானம் அடைந்து வாசல் திறந்து சுவாமியை கருவறையின் உள் அனுமதிக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கிராதம் கதகளி நடந்தது.

இன்று (ஏப்.2) காலை கோவில் தாமதமாகவே நடை திறக்கும். இன்று வேட்டை நிகழ்ச்சி நடந்ததால் கோவிலை புனிதப் படுத்தும் ” திருவிலக்கம் ” நிகழ்ச்சி காலை 11 மணிக்கும், மாலை 5.30 மணி அளவில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம் ஆற்றில் ஆறாட எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ ஆறாட்டுக்கு ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்துக்கு விக்ரகங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆறாட்டு மற்றும் பூஜைகள் நடந்தது. ஆறாட்டு முடிந்து திரும்பி வரும் சுவாமிகளுக்கு ஆற்றூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பில் புஷ்பாபிஷேகத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை மீட்பு மகளை தேடும் பணி தீவிரம்
பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம்
கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி

September 15, 2025
25 Views
சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆர்பாட்டம்
தங்கையின் சொத்தை போலி ஆவணம்
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
அமைச்சர் முத்துசாமி இன்று இறுதி கட்ட பிரசாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account