மதுரை, ஆகஸ்ட் 14 –
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், நுழைவு வளைவு, மேற்கூரை, 7 கடைகள் மற்றும் அலுவலக அறை, பணியாளர்கள் ஓய்வு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



