திருப்பத்தூர், ஜூலை 13 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள் முன்னிலையில் நேரடியாக மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிகுமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மட்டும்தான் மனுக்களை பெற்றதாக செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியதற்கு “அது போன்று தான் செய்தி பதிவிடுவோம்… மாவட்ட ஆட்சியர் என்று பதிவிட்டாலே போதும் பெயர் வேண்டாம் என்று கூறினார். இது போன்று மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா பிரகாஷ் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சித் தலைவர் பெயர் இல்லை என்று சுட்டிக்காட்டியும் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் பெயரை திட்டமிட்டே வேண்டாம் என்பது போல வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வாரா…?
இவ்விதத்தில் அலட்சியமாக பதில் கூறும் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா பிரகாஷ் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு சார்ந்த திட்டங்களை வழி வகுத்து வழங்குவார்.



