திருப்பத்தூர், ஜூன் 17 –
திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் சேமிப்பு கிடங்கினை உடனடியாக மூட வேண்டும் மேலும் கனிம சேமிப்பு கிடங்கிற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி பேசப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாநிலத் தலைவர் பேசுகையில், லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றக்கூடாது, ஏற்றப்படும் அளவிற்குண்டான நடை சீட்டு போடாமல் குறைத்துக்கொண்டு ஒரு லாரிக்கு போடப்பட்ட நடை சீட்டை மூன்று லாரிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். M send முறைகேடாக இருப்பு வைத்துக்கொண்டு இரண்டாம் விற்பனையை செய்து அரசிற்கு இழப்பு ஏற்படுத்துகின்றனர். லாரியில் அதிக பாரம் ஏற்றுவதுடன் உரிமையாளர்களிடம் மணம் பெற்றுக்கொண்டு லாரி உரிமையாளர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுகின்றனர்.லாரிகளில் லோடு ஏற்றும்போது தரச் சான்றிதழ் நகல், பகுப்பாய்வு நகல் வழங்க வேண்டும் ஆனால் வழங்கப்படுவதில்லை. GST பில் நடை சீட்டு கொடுக்காமல் டெலிவரி செலானுடன் லோடு எடுத்துச் செல்லும் வாகனங்களை வழியில் நிறுத்தி காவல் துறையினர், கனிம வளத்துறையினர் வாகன சோதனை செய்து ஜிஎஸ்டி பில் மற்றும் மற்றும் நடை சீட்டு இல்லாமல் அதிக பாரம் ஏற்றும் கனிமங்களை திருடி செல்வதாகவும் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள் என பல்வேறு குறைபாடுகளை கூறி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் செல்ல பாண்டியன், மாவட்ட செயலாளர் திருமலை, பொருளாளர் சஞ்சய் குமார், துணைத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஆனந்த பிரபு, துணைப் பொருளாளர் சக்கரவர்த்தி, தங்க அமைப்பாளர் செல்வநாதன், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



