திருப்பத்தூர், ஜூலை 31 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தெரிவித்ததாவது: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்கூழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் தேசிய ஊரக வேளாண் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாடு குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.
மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாட்டினை விரிவுபடுத்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பாக மல்லிகை பூ ஏற்றுமதி மற்றும் சிப்பம் கட்டும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் ஏலகிரி மலையில் உள்ள பழங்குடியினர் உழவர் உற்பத்தியளார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யும் ரோஜா மலர்களை அருகில் உள்ள ஒசூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களுக்கு சந்தைப்படுத்திட சந்தை வாய்ப்பினை உருவாக்கி தருமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் திருமணி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கார்த்திகேயன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தீபா, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மீனாட்சி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சீனிவாசன், தேசிய ஊரக வேளாண் வளர்ச்சி (நபார்டு) வங்கி மேலாளர் ஸ்ரீபாதராஜன், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



