புதுக்கடை, மார்ச் 23 –
புதுக்கடை அடுத்த அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லையன் (82). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென சாலையை கடக்க முயன்ற போது, தேங்காப்பட்டணம் – புதுக்கடை சாலையில் அதி வேகமாக ஓட்டி வந்த பைக் ஒன்று செல்லையன் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பைக்கை ஓட்டி வந்த அபின்ராஜ் (20 ) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுக்கடை அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் பால்மணி (57). இவர் சம்பவ தினம் புதுக்கடை தேங்காப்பட்டணம் சாலையில் நடந்து பைங்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென நடந்த சென்ற பால்மணியின் மீது கார் மோதி, அவரது கால் பாதத்தில் கார் ஏறி இறங்கி காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அந்த வாகனம் அங்கிருந்து சென்று விட்டது. காயமடைந்த பால்மணி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


