திருச்சி, ஏப்ரல் 25 –
திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏப்ரல் மாத குறைதீர் கூட்டம் திருச்சி சுப்பிரமணியம் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பயனாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மண்டல பிஎஃப் கமிஷனர் தெரிவித்துள்ளார்.



