திருச்சி, ஜூன் 9 –
திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர்கள், பாஜக பிரிவு அணி தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன், கே.டி. ராகவன், சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன், ராம சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.



