திருச்சி, ஜூன் 8 –
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் மோனோ பல்ஸ் செகண்டரி சர்வீலன்ஸ் என்ற நவீன ரேடார் கருவி அமைப்பதற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ரேடார் மூலம் விமானத்தின் வருகை திசை, அளவு மற்றும் பறக்கும் உயரம் போன்ற தகவல்கள் துல்லியமாக பெறப்படும். இந்த ரேடார் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



