திருச்சி, ஏப்ரல் 24 –
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், 15ஆவது வார்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வாக்கு செலுத்த வந்தபோது, தேர்தல் அலுவலர் அவருக்கு உதவ முயன்றார். அப்போது, மூதாட்டி விசில் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூறிய நிலையில், தேர்தல் அலுவலர் தவறுதலாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த தவெக நிர்வாகி ஒருவர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, ஒரு கட்சிக்கு வாக்களிக்க உதவக் கேட்டால் எப்படி மாற்றிப் போடலாம் என தேர்தல் அலுவலரிடம் கோபத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



